ஆந்திரா: புது மாப்பிள்ளைக்கு 250 வகையான உணவளித்து சங்கராந்தி விருந்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் புது மாப்பிள்ளைக்கு 250 வகையான உணவு பொருட்களுடன் சங்கராந்தி விருந்து பரிமாறி மைத்துனர் அசத்தியுள்ளார். கிருஷ்ணா மாவட்டம் சித்துபூர் கிராமத்தை சேர்ந்த சாய்நாத் என்பவரின்  சகோதரி நவ்யா - ரேவந்த் ஆகியோருக்கு கடந்த ஆண்டு திருமண நடைபெற்றது. இந்த நிலையில் சங்கராந்தியை முன்னிட்டு மாமியார் வீட்டுக்கு மனைவியுடன் வந்தார் ரேவந்த். புது மாப்பிள்ளையான தன்னுடைய சகோதரியின் கணவரை அசத்த முடிவு செய்த சாய்நாத் 250 வகையான உணவுப் பொருட்களை தயார் செய்து சகோதரிக்கும் அவருடைய கணவருக்கும் சங்கராந்தி விருந்தாக பரிமாறி அசத்தினார். அத்தனை உணவுகளையும் சாப்பிட முடியாமல் இரண்டு பேரும் திணறினர்.

Night
Day