ஆந்திர வனப்பகுதியில் மரத்தில் இருந்து கொட்டிய தண்ணீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திராவில் லாரல் மரத்தின் பட்டையை வனத்துறையினர் வெட்டிய இடத்தில் இருந்து தண்ணீர் கொட்டியது. அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டத்தில் உள்ள பாபிகொண்டா தேசிய பூங்காவில் உள்ள இந்திய லாரல் மரத்தின் பட்டைகளை வெட்டி கோடையில் தண்ணீர் சேமிப்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பாபிகொண்டா மலைத்தொடரில் உள்ள கொண்டா ரெட்டி பழங்குடியினர் பகிர்ந்த தகவலையடுத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, லாரல் மரத்தின் பட்டையை வெட்டிய போது தண்ணீர் கொட்டியது. அந்த, வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day