ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்டுக்கு விலையுயர்ந்த திருமண பரிசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருமண பந்தத்தில் இணையப் போகும் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோருக்கு முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதியர் துபாயில் மிக பிரமாண்டமான ஆடம்பர பங்களாவை திருமண பரிசாக வழங்கியுள்ளனர். முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு புதுமண தம்பதிகளுக்கு துபாயில் உள்ள பாம் ஜுமைரா (PALM JUMEIRAH)  பகுதியில் 76 மில்லியன் டாலர் மதிப்பில் அதாவது இந்திய மதிப்பில் 640 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர பங்களாவை திருமண பரிசாக அம்பானி வழங்கியுள்ளார். கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன், இத்தாலி மார்பில்களால் இழைக்கப்பட்ட 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 10 பிரமாண்ட படுக்கையறைகளை கொண்ட இந்த பங்களாவில் 70 மீட்டர் நீளம் கொண்ட செயற்கை கடற்கரையும் உள்ளது. 

Night
Day