ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா முதன் முறையாக 10 ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியா அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் முதல் முறையாக 10 ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து இந்தியா ராணுவ கூட்டு பயிற்சியில் ஈடுபடவுள்ளது. தான்சானியா, மோசம்பிகியூ உள்ளிட்ட 10 நாடுகளுடன் அடுத்த மாதம் இந்த பயிற்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 18 வரை தான்சானியாவுடன் இணைந்து இந்தியா பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இதற்காக இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

Night
Day