ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க குதிரை பேரம் - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி மாநில அரசை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பலரிடம் பா.ஜ.க. குதிரை பேரம் நடத்துவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். 21 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், பாரதிய ஜனதா கட்சி பக்கம் வந்தால் 25 கோடி ரூபாய் பணம் மற்றும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார். மதுபான ஊழல் வழக்கில் தன்னை கைது செய்ய முயற்சிக்கும் மத்திய அரசு, டெல்லி அரசை கலைக்க தீவிரமாக முயன்று வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

Night
Day