இஒஎஸ் 8 செயற்கைகோள் நாளை காலை விண்ணில் செலுத்தப்படும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஒஎஸ்-8' செயற்கைகோள் பயணம் வெற்றி அடைய வேண்டி, இஸ்ரோ குழுவினர், செயற்கைக்கோளின் மாதிரியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினர். புவி கண்காணிப்பு செயற்கை கோளான இஒஎஸ்-8 என்ற செயற்கைகோள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரோ குழுவினர், இஒஎஸ்-8 செயற்கைகோள் மாதிரியுடன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டனர்.

Night
Day