இந்தியாதான் ஜனநாயகத்தின் தாய் - குடியரசுத் தலைவர் உரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாதான் ஜனநாயகத்தின் தாய் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், நாட்டின் அரசியலமைப்பு தொடங்கியதைக் கொண்டாடும் பொன்னான நாள் என்றார். இந்தியாவின், ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தை விட மிகவும் பழமையானது என்றும் அமிர்த காலத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அயோத்தியில் ராமர் கோவில் திறப்பானது மக்களின் நம்பிக்கை மட்டுமல்லாமல் இந்திய நீதித்துறை மீதான நம்பிக்கைக்கும் சான்று என பெருமிதம் தெரிவித்தார். நாட்டின் விடுதலைக்காக இன்னுயிர் ஈந்தவர்களுக்கும் அரசியல் அமைப்பை உருவாக்க பங்களித்தவர்களுக்கும் இன்று நாம் மரியாதை செலுத்துவோம் எனக் குறிப்பிட்டார்.

Night
Day