இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு அழித்துவிட்டது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு அழித்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, பேசிய ராகுல் காந்தி, இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு அழித்துவிட்டதாகவும், தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளையும் திட்டமிட்டு முடக்கியதாகவும் குற்றம்சாட்டினார். வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை செயல்படவிடாமல் தடுக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டினார். 

varient
Night
Day