இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி அசாமில் தான் நடக்கிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி அசாமில் தான் நடப்பதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார். யாத்திரையின் 5-வது நாளான இன்று அசாமில் உள்ள சிவசாகரில் ராகுல் காந்தியின் யாத்திரை நுழைந்தது. அப்போது அங்கு மக்‍கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் அநீதி செய்து வருவதாகக்‍ கூறினார். மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவியும், பிரதமர் மோடி இன்று வரை அந்த மாநிலத்துக்குச் செல்லவில்லை என்றும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். 

Night
Day