இந்தியாவில்தான் உள்ளார் ஷேக் ஹசீனா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா, தனது முடிவை தெரிவிக்க 3 நாட்கள் அவகாசம் வேண்டுமென மத்திய அரசை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரம் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத்தளத்தின் பாதுகாக்கப்பட்ட இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர், தனது அடுத்தக்கட்ட முடிவை தெரிவிக்க 2 அல்லது 3 நாட்கள் அவகாசம் வேண்டுமென, மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஷேக் ஹசீனா தனது அடுத்த கட்ட பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இங்கிலாந்து செல்வதற்கான திட்டமிடுதலை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day