இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க உள்ளோம்- பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிங்கப்பூர் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளோடு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி முரசு ஒலித்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக புரூனே நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அதனைத்தொடர்ந்து தற்போது சிங்கப்பூர் சென்றடைந்தார். சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமானநிலையத்தில், அந்நாட்டு அதிபர் தர்மான் சண்முகரத்தினம் பிரதமரை வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து தங்கும் நட்சத்திர விடுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, இசை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் முரசு இசைத்து மகிழ்ச்சியடைந்தார். பிரதமரை வரவேற்க கூடியிருந்த மக்களுடன், பிரதமர் மோடி கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர்  நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடிக்கு இன்று அரசுமுறைப்படி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னா், அதிபா் தா்மன் சண்முகரத்னத்துடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

Night
Day