இந்தியா கூட்டணிக்கு தேசத்தின் மீது அக்கறை இல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேசத்தின் வளர்ச்சி பற்றி இந்தியா கூட்டணிக்கு கவலையில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். அசாம் மநிலம் கோகராஜார் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில நட்டா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தது போல் வேறு எந்த பிரதமரும் வரவில்லை எனவும், 70 சதவீத பகுதிகளில் சிறப்பு ஆயத சட்டம் திரும்ப பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பெரும்பாலோர் சிறையிலும் அல்லது ஜாமீனிலும் உள்ளதாக விமர்சித்த நட்டா, மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெறுவதே அவர்களின் நோக்கம் என கூறினார்.

varient
Night
Day