இந்தியா கூட்டணியின் பேரணிக்கு திரண்ட கூட்டம் பாஜகவுக்கான எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணியின் பேரணிக்காக திரண்ட கூட்டம் பாஜகவுக்கான எச்சரிக்கை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி கூட்டம் நடைபெற்றது. இதில், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், பாஜகவுக்கு எதிரான 18 கட்சிகள் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார். அரசின் சர்வாதிகார நடவடிக்கை மூலம் மக்களை தேர்தலில் சமநிலை பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளும் பாஜக மீது குற்றம் சாட்டின. 

Night
Day