இந்தியா கூட்டணியில் இருந்தால் நிதிஷ்குமார் பிரதமராகலாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணியுடன் வலுவாக நின்றால் நிதிஷ் குமார் பிரதமராகலாம் என சமாஜ்வாதிக் கட்சித் தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாரின் தற்போதைய நகர்வுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் இந்தியா கூட்டணியில் தொடர வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஏனென்றால் நிதிஷ் குமாரின் பெரு முயற்சி காரணமாகவே இந்தியா கூட்டணி உருவானதாகவும் குறிப்பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி போன்ற கூட்டணிக் கட்சிகள் விவகாரத்தில் காங்கிரஸ் விட்டுக் கொடுத்து முன்னோக்கி வந்திருக்க வேண்டும் என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Night
Day