இந்தியா கூட்டணியில் நீடிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக கூட்டணிக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் செல்லவிருப்பதாக வெளியான தகவல்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சி மறுத்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் உமேஷ் சிங், இந்தியா கூட்டணியில் தான் தாங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும் தொகுதி பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஆனாலும், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நிதிஷ்குமார் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்காததால் கூட்டணி முறிவு உறுதி என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் பாஜகவின் 2 நாள் மாநில செயற்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது.

Night
Day