இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் மாவட்டம் பலொபெட் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தானில் இருந்து ஒரு சிறுவன் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த சிறுவன் பாகிஸ்தானின் கசூர் பகுதியை சேர்ந்தவன் என்பதும், அவனிடம் ஒரு செல்போன் மற்றும் 100 ரூபாய் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அச்சிறுவனை ஹர்லரா பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day