இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு போர்க்கப்பல் நடமாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பெருங்கடல் பகுதியில் நடமாடி வரும் சீன உளவு போர்க்கப்பலை இந்திய கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறது. சீன உளவு போர்க்கப்பலான க்சியாங் யாங் ஹோங் 3, மாலத்தீவு தலைநகர் மாலேவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு வேவு போர்க்கப்பலான க்சியாங் யாங் ஹோங் ஒன்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நடமாடி வருகிறது. க்சியாங் யாங் ஹோங்-1 உளவு போர்க்கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், கொழும்பில் போர்க்கப்பலை நிறுத்த அனுமதிக்குமாறும் இலங்கை அரசுக்கு சீனா நிர்பந்தம் அளித்து வருவது தெரியவந்துள்ளது. எனினும் சீன உளவு போர்க்கப்பல்களை இந்திய கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறத. 

Night
Day