இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவி மாநிலங்களவை எம்.பி-யாக நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், இந்திய குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்திருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாகவும், மாநிலங்களவையில் சுதா மூர்த்தியின் இருப்பு நமது பெண் சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் குறிப்பிட்டுள்ளார். சுதா மூர்த்தியின் நாடாளுமன்ற பயணம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பளித்த 12 பேரை மாநிலங்களவை எம்.பியாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day