இன்னும் எத்தனை பேரை வேட்டையாடப் போகிறீர்கள் - பிரதமரிடம் கார்கே கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தி பாஜகவில் இணைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாமில் உரையாற்றிய அவர், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நாடாளுமன்ற தேநீர் கூட்டத்தில், இன்னும் எத்தனை பேரை பாஜக வேட்டையாடப் போகிறது எனக் கேட்டதாக கூறினார். அதற்கு மக்கள் பாஜகவில் சேர விரும்பினால் தான் என்ன செய்ய முடியும் என  பிரதமர் பதிலளித்ததாக குறிப்பிட்டார். அச்சுறுத்தியே பாஜகவில் சேர்க்கப்படுவதாக அவரிடம் குற்றம் சாட்டியதாகவும் அதே நேரத்தில் அப்படி பாஜகவில் இணைவது மிகவும் கோழைத்தனமான செயல் என்றும் கார்கே சாடினார்.

Night
Day