இமாச்சலப் பிரதேச சபாநாயகர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக பக்கம் தாவிய 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த மாநிலங்களவை தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் பெரும்பான்மை இருந்தும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார். காரணம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் மற்றும் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளித்தனர். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் கொறடா அளித்த உத்தரவை மீறி மாற்றுக் கட்சிக்கு வாக்களித்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இந்நிலையில் சபாநாயகரின் முடிவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

varient
Night
Day