இமாச்சலில் காங்கிரஸ் எம்எல்ஏக்‍கள் அணி மாறி வாக்‍களித்ததால் அபிஷேக்‍ சிங்வி தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைக்‍கான தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் 6 பேர் அணி மாறி வாக்‍களித்ததால் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இமாச்சலப்பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். மொத்தம் 68 இடங்களில் காங்கிரசுக்‍கு 40 எம்எல்ஏக்‍களும் பா.ஜகவுக்‍கு 25 எம்எல்ஏக்‍களும் உள்ளனர். சுயேச்சை எம்எல்ஏக்‍கள் 3 பேர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் 67 பேர் வாக்‍களித்தனர். காங்கிரஸ் சார்பில் அபிஷேக்‍ மனு சிங்வியும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜனும் போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-க்களில் ஆறுபேரும், சுயேச்சை எம்எல்ஏக்‍கள் 3 பேரும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்‍கு வாக்‍களித்ததால் அவர் எளிதில் வெற்றி பெற்றார். இதனால் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் மாநிலங்களவை தேர்தலில் தோல்வியடைந்தது.

Night
Day