இளைஞரின் குடலில் இருந்து உயிருள்ள கரப்பான் பூச்சியை அகற்றிய மருத்துவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் இளைஞரின் குடலில் உயிரோட இருந்த கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.


டெல்லியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர், கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலி மற்றும் உணவு செரிமானப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது சிறுகுடலில் உயிரோடு ஒரு கர்பான்பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், எண்டோஸ்கோபிக் நுட்பங்களைப் பயன்படுத்தி இளைஞரின் குடலில் 3 சென்டி மீட்டர் நீளத்தில் உயிரோட இருந்த கரப்பான் பூச்சியை அகற்றினர். நோயாளி சாப்பிடும்போது அல்லது தூங்கும் போது கரப்பான் பூச்சியை விழுங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Night
Day