இஸ்ரேலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பலியான கேரள நபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலில் ஏவுகணைத் தாக்குதலில் பலியான கேரளாவைச் சேர்ந்தவரின் உடல் சொந்த மாநிலம் வந்தடைந்தது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் நடைபெற்று வரும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இஸ்ரேலின் கலிலீ மாகாணத்தில் அவர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாட்னிபின் மேக்ஸ்வெல் என்பவர் கொல்லப்பட்டார். இந்தநிலையில், அவரது உடல் நேற்று திருவனந்தபுரம் வந்தடைந்தது. உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் முரளிதரன், இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Night
Day