இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்

எழுத்தின் அளவு: அ+ அ-


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. வயது மூப்பின் காரணமாக ஏற்படும் உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்த கஸ்தூரி ரங்கன் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கஸ்தூரி ரங்கன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கஸ்தூரி ரங்கன் கடந்த 1994ம் ஆண்டு முதல் 2003 வரை இஸ்ரோவின் தலைவராக பணியாற்றியவர். இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர் கஸ்தூரி ரங்கன். இவர் 2003 முதல் 2009ம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை குழுவின் தலைவராகவும் கஸ்தூரி ரங்கன் இருந்துள்ளார். இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது.

Night
Day