உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரசன்னா பி வரலே பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி பிரசன்னா பி வரலே உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் சிறப்பாக செயல்பட்ட நீதிபதி பிரசன்னா பி வரலேவை  உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் அண்மையில் பரிந்துரை செய்திருந்தது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இன்று அவருக்‍கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி வரலே பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, உச்ச நீதிமன்றம் 34 நீதிபதிகள் கொண்ட முழு பலத்தை அடைந்துள்ளது.

Night
Day