உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்றுவதையே இலக்கு - டி.ஓய்.சந்திரசூட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்றுவதையே இலக்காகக் கொண்டுள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். கோவாவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க மாநாட்டில் உரையாற்றிய அவர், நீதிமன்ற நடைமுறைகளை எளிதாக்கி மக்கள் பயன்பெறும் வகையில் பல தொழில்நுட்ப மாற்றங்களை தான் செய்துள்ளதாக குறிப்பிட்டார். மக்கள் நீதிமன்றம் என்பதால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை நிறைவேற்றுகிறோம் என்று அர்த்தமல்ல எனக் கூறிய அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும்போது ஆமோதிப்பதும், எதிராக வரும்போது கேவலப்படுத்துவதும் ஆபத்தான போக்கு எனச் சுட்டிக்காட்டினார். உச்சநீதிமன்றம் மக்கள் நீதிமன்றமாக எதிர்காலத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சந்திரசூட் வலியுறுத்தினார்.

Night
Day