உண்மை கண்டறியும் சோதனையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சஞ்சய் ராய்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தா பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததை உண்மை கண்டறியும் சோதனையில், குற்றவாளி சஞ்சய் ராய் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய், தன் மீதான குற்றத்தை மறுத்து வந்த நிலையில், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சஞ்சய் ராய் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அவர் மருத்துவனைக்குள் நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அது விசாரணையில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

Night
Day