உத்தரகாண்ட் : மலையேற்றத்தில் ஈடுபட்டு உயிரிழந்த 9 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டு உயிரிழந்த 9 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 


உத்தரகாசி மாவட்டத்தில் சஹஸ்த்ரா தல் மலைப்பகுதியில் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழுவினர் கடந்த மே 29ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டனர். இவர் நாளை மலையடிவாரத்திற்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், கடந்த 3ம் தேதி மலையடிவாரத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது, மோசமான வானிலை காரணமாக 13 பேர் வழிதவறியதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, 13 பேர் ஹெலிக்காப்டர்கள் மூலமாக மீட்கப்பட்டனர். மாயமான மீதமுள்ள 9 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

varient
Night
Day