உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் மதுவில் தள்ளாடுகிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்கள், மதுவில் தள்ளாடுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். அமேதி தொகுதியில், பாரத் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள அவர், அங்கு மக்களிடம் பேசினார். அப்போது, தான் வாரணாசிக்கு சென்றதையும், அங்குள்ள மக்கள் இரவில் மது போதையில் படுத்திருந்ததாகவும், பலர் தள்ளாடியதாகவும் கூறினார். உத்தரபிரதேசத்தின் எதிர்காலம் ஒருபுறம் தள்ளாடி வருவதாக  ராகுல்காந்தி குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. வாரணாசி நாடாளுமன்ற தொகுதி, பிரதமர் மோடி வெற்றிபெற்ற தொகுதி என்பதால், இந்தக் கருத்து பரபரப்பாகி உள்ளது.

Night
Day