உத்தரபிரதேசம்: ஆட்டோ மீது மோதிய கண்டெய்னர் லாரி - 12 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் ஆட்டோவும் கன்டெய்னா் லாரியும் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். பவுர்ணமி தினத்தையொட்டி கங்கை நதியில் புனித நீராடுவதற்காக ஃபருக்காபாத்துக்கு ஒரு குழுவினர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுக்சகி கிராமம் அருகே எதிரே தவறான பாதையில் வந்த கன்டெய்னர் லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 12 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கடும் பனிப்பொழிவால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

varient
Night
Day