உத்தரபிரதேசம்: டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மகா பூர்ணிமாவை முன்னிட்டு கங்கையில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் டிராக்டர் மூலம் கஸ்கஞ்ச் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அங்கிருந்த குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day