உத்தரப்பிரதேசம் : அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - குடியிருப்புவாசிகள் அலறல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் மேற்கு கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு வீடுகளில் பற்றி எரிந்த தீயால் குடியிருப்பு வாசிகள் அலறியடித்துக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியேறினர். கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பால் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதியே கரும்புகையால் சூழ்ந்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Night
Day