உத்தரப்பிரதேசம் : 2 சிறுவர்களை கொன்ற சலூன் கடை உரிமையாளர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில், சகோதரர்களான 2 சிறுவர்களை கொன்ற சலூன் கடை உரிமையாளர், என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படாவுன் நகர் அருகே உள்ள பாபா காலனி பகுதியில், சலூன் கடை நடத்தி வரும் முகமது சாஜித் என்பவருக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் வினோத் தாக்கூர் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு வினோத் வீட்டுக்குள் நுழைந்த சாஜித்,  அவரது 13 மற்றும் 6 வயது மகன்கள் இருவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இதையறிந்து அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் குற்றவாளி சாஜித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சாஜித்தை தேடியபோது, வனப்பகுதியில் மறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடிக்க முயன்றபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பதில் தாக்குதலில் சாஜித் கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Night
Day