உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை அளிக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

செந்தில் பாலாஜி வழக்கை சிறப்பு நீதிபதியை நியமித்து விரைந்து விசாரணை மேற்கொள்ள முடியுமா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி வழக்குகளை  தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துவதாக கூறி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி வழக்கில் 600-க்கும் மேற்பட்ட அரசு தரப்பு சாட்சியங்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும் நடத்த வேண்டியுள்ளதால் தனியாக சிறப்பு நீதிபதியை நியமித்து, அவரிடம் வழக்கை ஒப்படைப்பதே சரியானது என கருத்துத் தெரிவித்தது. எனவே, வேறு ஒரு நீதிபதி முன் வழக்கை பட்டியலிடும்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறும் அதுகுறித்த அறிக்கையை வரும் 22-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. 

Night
Day