உ.பி மக்களவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது குறித்து ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து 80 பேர் கொண்ட குழுவுடன் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என எதிர்பார்த்த நிலையில், 33 இடங்களை மட்டுமே அக்கட்சி கைப்பற்றியது. இதனால் மிகப்பெரும் குழப்பத்தில் உள்ள பாஜக, தோல்விக்குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில் பாஜகவை சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவுடன் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் பாஜகவை சேர்ந்த எம்பிக்கள் சம்பந்தப்பட்ட தொகுதியில் எவ்வித பணிகளும் மேற்கொள்ளாதது தோல்விக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பதவியில் இருந்த எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதாலும் பாஜக மிகப்பெரும் தோல்வி சந்தித்தற்கான காரணமாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Night
Day