உ.பி-யில் ஓநாய் கூட்டம் தாக்கி மேலும் ஒரு சிறுமி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் பீதி அதிகரித்துள்ளது. அங்குள்ள பஹ்ரைச் பகுதியில் 8 பேரை வேட்டையாடி கொன்ற ஓநாய்களை கண்டுபிடிக்க வனத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். ஓநாய்களின் தாக்குதலுக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மனிதர்களை வேட்டையாடும் ஓநாய்களை இரவு, பகலாக ட்ரோன் மூலம் தேடிவந்த வனத்துறையினர் 4 ஓநாய்களை பிடித்தனர்.  ஆக்ரோஷமாக சுற்றி திரியும் மேலும் 2 ஓநாய்களை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நேற்று இரவு மீண்டும் ஓநாய்கள் கிராமங்களை தாக்கின. இதில் ஒரு சிறுமி உயிர் இழந்த நிலையில், இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.  

Night
Day