உ.பி. - மேலும் ஒரு ஓநாய் கூண்டில் சிக்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் 9 பேரை கடித்து கொன்ற 5வது ஓநாய் கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

பஹ்ரைச் கிராமத்தில் கடந்த 2 மாதங்களில் குழந்தை உட்பட 9 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஓநாய்களைப் பிடிப்பதற்கு ஆபரேஷன் பெடியா எனப் பெயரிடப்பட்டு, டிரோன் மூலம் ஓநாய்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 4 ஓநாய்கள் பிடிப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஓநாய் சிக்கியதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறை கூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வரும் மற்றொரு ஓநாயை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Night
Day