உ.பி.: உயர் அழுத்த மின்கம்பியில் உரசி தீப்பிடித்த பேருந்து - 5க்கும் மேற்பட்டோர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 5க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஜிபூர் அருகே உள்ள மர்தா அருகே 30 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது உயர் அழுத்த மின்கம்பி மீது பேருந்து எதிர்பாராத விதமாக உரசி தீப்பிடித்ததில் 5க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியாத நிலையில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Night
Day