உ.பி.: ரயில் பயணியை தாக்கும் டிக்கெட் பரிசோதகர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் கண்மூடித்தனமாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பரௌனி-லக்னோ விரைவு ரயிலில் அரங்கேறிய இந்த சம்பவத்தின் காணொலியில், தன் மீது என்ன தவறு என பயணி கேட்க, அதற்கு டிக்கெட் பரிசோதகர், அந்த பயணியின் கன்னத்தில் அறைவதுடன் அவரின் மப்ளரை பிடித்து இழுத்து தொடர்ந்து தாக்குகிறார். இதனை செல்போனில் பதிவு செய்தவரிடமும் டிக்கெட் பரிசோதகர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த காணொலி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர், உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக வடகிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Night
Day