எதிர்க்கட்சி வரிசையில் அமர "இந்தியா கூட்டணி" முடிவு - மல்லிகார்ஜூன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாசிச ஆட்சியை இந்தியா கூட்டணி தொடர்ந்து எதிர்க்கும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடியும், பாஜகவும் செயல்பட்டாலும் இந்தியா கூட்டணி தற்போது எதிர்க்கட்சியில் அமரும் என்றார். அதேநேரத்தில் பாஜக ஆட்சியமைக்கக்கூடாது என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மோடிக்கு எதிராகவும், அவரது அரசியல் கொள்கை  மற்றும் பாணிக்கு எதிராகவும் மக்களின் ஆணை தீர்க்கமாக உள்ளதாகவும், ஆனாலும் அதனையும் மீறி பிரதமராக அவர் முடிவு செய்துள்ளதாகவும் கார்கே குறிப்பிட்டார்.

Night
Day