எனக்கான நீதி 7 அல்லது 8 மாதங்களில் கிடைக்கும் என எதிர்பார்த்தேன் - மணீஷ் சிசோடியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனக்கான நீதி 7 அல்லது 8 மாதங்களில் கிடைத்துவிடும் என நினைத்ததாக டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு நேற்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து இன்று டெல்லியில் இருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்திய அவர், பின்னர் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இதனையடுத்து ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், இந்த கண்ணீர்தான் தன்னை மேலும் சக்தி வாய்ந்தவனாக மாற்றியதாகவும், தனக்கு 7 அல்லது 8 மாதங்களில் தனக்கான நீதி கிடைத்துவிடும் என எதிர்பார்த்ததாகவும் கூறினார். இறுதியில் தன்னுடைய நேர்மையும் உண்மையும் வென்றது என உணர்ச்சிவசப்பட்டு சிசோடியா தெரிவித்தார்.

Night
Day