என் கைதுக்கு மத்திய பாஜக அரசே காரணம் - ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தன் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் என மத்திய அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சவால் விடுத்துள்ளார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று பேசிய அவர், தனது கைதுக்கு மத்திய பாஜக அரசுதான் காரணம் என குற்றம்சாட்டினார். தான் கைது செய்யப்பட்ட கடந்த 31ம் தேதி இந்தியாவிற்கே கருப்பு நாள் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார் எனவும் ஹேமந்த் சோரன் தெரிவித்தார். 

Night
Day