எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள்; சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர் !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். குப்வாரா மாவட்டம் கெரான் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Night
Day