எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 இந்திய மீனவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை அடக்கி, உள்ளூர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி யாழ்ப்பாணம் கோவிலான் கலங்கரை விளக்கத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேரை கைது செய்து, இந்திய மீன்பிடிக் படகையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 இந்திய மீனவர்களையும்  காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day