எஸ்.சி. எஸ்.டிக்கு காங்கிரஸ்தான் முதல் எதிரி - மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எஸ்.சி., எஸ்.டி. மக்களின் நலம் விரும்பிகள் போல பேசும் இந்தியா கூட்டணிதான் அவர்களுடைய முதல் எதிரி என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ப்ரத்யேகமாக பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுடைய தலையெழுத்து மாறப்போகிறது என்றும், ஒடிசா அரசின் காலாவதி தேதி ஜூன் 4 மற்றும் ஜூன் 10ம் தேதி என்றும் தெரிவித்தார். எஸ்.சி., எஸ்.டி. மக்களின் நலம் விரும்பிகள் போல பேசும் இந்தியா கூட்டணி தான் அவர்களுடைய முதல் எதிரி என்றும், இஸ்லாமியர்கள் ஆதரவு கட்சியான காங்கிரஸ், தலித் மக்களுக்கு என்ன உதவி செய்ய போகிறது எனவும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். 

இடஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் பாவச்செயலில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டதாகவும் அதற்கு எதிராக தான் இருப்பதால் இதுபோன்ற பொய்களை தெரிவித்து வருவதாகவும் சாடினார். யார் சிறைக்கு செல்ல வேண்டுமென பிரதமர் மோடிதான் முடிவு செய்வார் என்ற அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு பதிலளித்த பிரமர் மோடி, இவர்கள் அரசியல் சட்டத்தை படித்தால் நன்றாக இருக்கும் என்றும், தான் யாரிடமும் எதுவும் சொல்ல தேவையில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையை அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படுவதாக வரும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, இந்த குப்பைகளை வீசுபவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேள்ளுங்கள் என்றும், இந்த குப்பையை உரமாக மாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

Night
Day