ஏர் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேரடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்புக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு முக்கியமான இணைப்பு என பாராட்டு தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், நவம்பர் 12 ஆம் தேதிக்கு பிறகு விஸ்தாரா பெயரில் விமானம் இயங்காது எனவும் அறிவித்துள்ளது.

Night
Day