ஏர் இந்தியாவில் வேலை - நேர்க்காணலில் திரண்ட இளைஞர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்துகொள்ள ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் மும்பையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 2 ஆயிரத்து 216 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இதற்கான நேர்காணல் மும்பை கலினா பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொள்ள ஒரே நேரத்தில் 25ஆயிரத்தும் அதிகமான இளைஞர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டதுடன், சில இளைஞர்கள் வாகனங்கள் மற்றும் மரங்கள் மீது ஏறி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day