ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகாரில் இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால், முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளார்.  இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், வரும் 2025 ஆம் ஆண்டும் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது இணைந்திருக்கும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஓராண்டுக்கும் குறைவாக தான் இணைந்திருக்கும் என எழுத்துப்பூர்வமாக எழுதி தருவதாக தெரிவித்தார்.

Night
Day