ஐதராபாத்தில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நக்சைட்களுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்‍கப்படும் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். மாவோயிஸ்ட், நக்சலைட்டுக்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் நக்சலைட் ஆதரவாளரான  வரவர ராவ் மருமகன் வேணுகோபாலின் ஹிமாயத் நகர்  வீடு உள்பட 3 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் முடிவில் நக்‍சலைட்கள் தொடர்பான முக்‍கிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.

Night
Day