ஒடிசா : தனி ஒரு ஆளாக மயானத்தில் உடல்கள் தகனம் செய்து வரும் பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசா மாநிலம் மயூர்பாஞ் மாவட்டத்தில் தனி ஒரு ஆளாக கடந்த 14 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட உடல்களை தகனம் செய்து பெண் ஒருவர் ஆச்சரியப்படுத்திள்ளார். மயூர்பாஞ் மாவட்டத்தில் உள்ள பரிபாடா நகராட்சியில் உள்ள மயானத்தில் லக்‌ஷ்மி ஜெனா என்ற பெண் பணியாற்றி வருகிறார். தனது கணவர் மற்றும் 5 குழந்தைகளுடன் மயானத்திலேயே தங்கியிருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்து வரும் அவர், கடந்த 14 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட உடல்களை தகனம் செய்துள்ளார். அவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

Night
Day